எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்துவந்த பாலசுப்பிரமணியன் (29), எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அம் மாணவர் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து, அம் மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சுவாமிமலை காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மீது போகஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Comments are closed.