திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த 32 வயதுடைய சரவணக்குமார் என்ற இளைஞர், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரியும் சரோஜா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம், இரு வீட்டார் சம்மதத்துடன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.

இத் திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Comments are closed.