ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற கோ பூஜை!

ஆடி வெள்ளியை முன்னிட்டு சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கோ பூஜை மற்றும் சுமங்கலி பூஜையில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்;ந்த பெண்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, 11 மாடுகள் கோவில் வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவைகளுக்கு பெண்களால் சந்தனம், குங்குமம், மஞ்சள் இடப்பட்டு, பின்னர் மாலை, வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டது.

பின்னர் மாடுகளுக்கு பன்னீர் தெளித்து, அனைவரும் மந்திரம் கூற, அகத்திக்கீரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கொய்யாப்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஊட்டப்பட்டன.

பின்னர் அனைவரும் மாடுகளை வணங்கி வழிபட்டனர். இறுதியாக, பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொப்பம்பட்டி, நாகியம்பட்டி உலிபுரம், ஜங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களில் இருந்து திரளான மக்கள் பங்கேற்றனர்.

Comments are closed.