அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி கே. புழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. புழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இத் தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே, தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட இவ்வழக்கை நிராகரிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், பொதுச் செயலாளர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செல்லும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Comments are closed.