இராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பனில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
மாறன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் அனைவரையும் கல்பிட்டி கடற்பரப்பு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.