போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்களில், சித்தராமையா 2024 முதல் 7 முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.
ஏழு விதிமுறைகளில் ஆறு, முதல்வர் சித்தராமையா வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்தபோது சீட் பெல்ட் அணியாததற்காக பதவாகியுள்ளன. மேலும், அவரது வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. எனவே சித்தராமையா ரூ.2,500 அபராத தொகையை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.