தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாளவித் திருநாளாகும். ஆதற்கான முன்பதிவு கடந்த 18, 19, 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவடைந்தது.

இணையவழியிலேயே பெரும்பாலானோர் முன்பதிவு செய்த நிலையில், ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவுக்கு வந்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந் நிலையில், சென்னை எழும்பூர் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி தென் மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக 11 சிறப்பு சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே துறையில் அனுமதி கோரப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாளில் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திலிருந்து 2 மின்சார ரயில்களை திருச்சி வரை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைவருக்கும் ரயில்களில் இடவசதி ஏற்படுத்தித்தர உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.