குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி?: பாஜக கேள்வி

இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாரதிய ஜனதாக கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து வாக்களார் பட்டியில் உள்ள குளறுபடிகள் தொடர்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இது தொடர்பாக பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருப்பாளர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்திய வாக்காளர் பட்டியில் சோனியா காந்தியின் பெயர் சட்டத்துக்குப் புறம்பாக சேர்க்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு அவர் இத்தாலிய குடிமகளாக இருந்தபோது, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது.

அச் சமயத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இல்லமான 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தனர். அம் முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி பெயர்கள் இருந்தன. 1980ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டபோது, வாக்குச் சாவடி 145, எண் 388ல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை உள்ள ஒருவரே வாக்காளராக இருக்க முடியும். இது சட்ட மீறலாகும். 1982ஆம் ஆண்டு இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அவரது பெயர் நீக்கப்பட்டு, 1983ல் சேர்க்கப்பட்டது.

அப்போதும் பிரச்சினை எழுந்தது. சோனியா காந்திக்கு 1983 ஏப்ரல் 30ஆம் தேதிதான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், 1983 ஜனவரி 1ஆம் தேதியின்படி, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140, எண் 236ல் இடம் பெற்றிருந்தது.

குடியுரிமை பெறுவதற்கு முன்னதாகவே, இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னர், இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஆனது ஏன் என்று கூட நாங்கள் கேள்வி எழுப்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.