மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கோவிலில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து, அம்மன் சுவாமி சன்னதிகள், தங்க கொடிமரம், அன்னதானம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன்; தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் எந்த வெடிபொருளும் கண்டறியப்படாத நிலையில் இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா
இதேபோல, திருப்பரங்குன்றம் கோவில், சிக்கந்தர் தர்காவுக்கும் மர்ம நபர்களிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.