தீரன் சின்னமலை புகழ் ஓங்குக! முதல்வர் ஸ்டாலின் பதிவு

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 


எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழந்தோம் என்பதே முக்கியம் என ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள்!

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, நம் உரிமைகளில் எவர் கை வைத்தாலும் வெகுண்டெழுவோம் என்ற தன்மான உணர்வை இம்மண்ணில் விதைத்துச் சென்ற வீரப்பெருஞ்சுடரான தீரன் சின்னமலை அவர்களின் புகழ் ஓங்குக! என்று பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.